Saturday, February 13, 2016

கருத்தைக் கவர்ந்த கற்படிமம்

0 மறுமொழிகள்





பேராசிரியர், கவிஞர் த.பழமலய் அவர்களை, அவரது இல்லத்தில் அடிக்கடி சந்தித்துப் பேசுவேன்.

அப்போதெல்லாம், அவரதுப் புத்தக அலமாரியில் இருக்கும் “கல்” ஒன்று என் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. “பேப்பர் வெயிட்டாக இருக்குமோ?”

ஒருநாள் கேட்டுவிட்டேன். “என்னங்க ஐயா இது?”

“இது ஃபாசில். கல்லாகிப் போன ஒரு நத்தை. அரியலூர் பகுதியில் நிறையக் கிடைக்கிறது.” முன்னும் பின்னும் அடியுலுமாகத் திருப்பிக் காண்பித்தார். வியந்தேன்.

உண்மைதான். அப்பகுதியில் உள்ள சாத்தனூர் கல் மரங்களும், டைனோசர் முட்டைப் படிமங்களும் உலகப் பிரசித்துப் பெற்றவை.

ஏன், நம்ம மாவட்டத்து, திருவக்கரைக் கல் மரங்களும் பிரசித்திப் பெற்றவைதானே.

இந்த ஃபாசில், கற் படிமங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது,

90களில் தொடக்கத்தில் எண்ணாயிரம் கிராமத்தில் கிடைத்ததாகச் சொல்லப்படும் ஒரு விலங்கின் கற்படிமம்,

பொம்மையார் பாளையம் ஓடையில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் குழந்தையின் மண்டை ஓடு (கல்லாகிப் போனது).

இவையும் பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள்.

எண்ணாயிரம், பொம்மையார்பாளையம் கண்டெடுப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா? சரியானப் பதிவுகள் இருக்கின்றதா?

எனக்கு இதுவரைத் தெரியவில்லை.

வல்லோர்தான் விளக்க வேண்டும்..!

கோ.செங்குட்டுவன்.
13.02.2016

மறுமொழிகள்

0 comments to "கருத்தைக் கவர்ந்த கற்படிமம் "

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES